மேம்பால திட்டம் ரத்து செய்ய காரணம் இதுதான்..!
தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட டெண்டர்கள் பலவற்றை த.வெ.க ரத்து செய்து வருகிறது. சமீபத்தில் ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட டெண்டர்களை ரத்து செய்த மாநகராட்சி, செலவுகளை மேலும் குறைக்கவும், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை வகுக்கவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளச்சேரி மேம்பாலத் திட்டம் உள்ளிட்ட ரூ.600 முதல் ரூ.700 கோடி வரையிலான டெண்டர்களை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இவை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து கரூரில் பேசிய முதலமைச்சர் விஜய், திட்ட செலவு உண்மையான செலவை விட இரு மடங்காக இருந்ததால் சென்னையில் ஒரு மேம்பாலத்திற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக கூறினார். விஜயின் இந்த பேச்சு, மாநகராட்சி அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை மாத நிலவரப்படி, சென்னையில் இரண்டு முக்கிய மேம்பால ஒப்பந்தங்கள் மட்டுமே பரிசீலனையில் இருந்தன. பெருநகர சென்னை மாநகராட்சியால் முன்மொழியப்பட்ட ரூ.310 கோடி மதிப்பிலான வேளச்சேரி மேம்பாலம் மற்றும் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரூ.2,100 கோடி மதிப்பிலான திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட வழித்தடம்.
‘தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்று கரூர் மக்களுக்கு தெரியும்; ஓடு, ஓடு, ஓடு’: விஜய்க்கு உடனடி பதில் கொடுத்த செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனைகளில் சீர்கேடுகளைச் சரிசெய்ய அதிரடி நடவடிக்கை: 300 தொடர்பு அதிகாரிகள் நியமனம். இந்த இரு திட்டங்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் செலவுகள் இரு மடங்காக அதிகப்படுத்தப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். வேளச்சேரி மேம்பாலத்திற்கான டெண்டர், செலவு அதிகரிப்பு காரணமாக ரத்து செய்யப்படவில்லை. அதன் வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் முரண்பட்டதாலும், நிதிப் பற்றாக்குறையாலும் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக ஜி.சி.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் இருந்தன, மேலும் ஜி.சி.சி நிறுவனத்திடமே ரூ.300 கோடி இல்லை. செலவுகளைக் குறைப்பதற்காக சில கூறுகளைக் குறைக்க முடிந்தாலும், மதிப்பீடு இருமடங்கு உயர்த்தப்பட்டதாக ஒருபோதும் கண்டறியப்படவில்லை. நாங்கள் முதலமைச்சர் அலுவலகத்திற்கும் அதுபோன்ற அறிக்கையை அளிக்கவில்லை” என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இரண்டாவது திட்டமான, 13.3 கி.மீ நீளமுள்ள கிழக்கு கடற்கரை வழித்தட உயர்மட்ட சுங்கச்சாவடி வழித்தடம், தற்போது நிதி மற்றும் சாத்தியக்கூறு ஆய்வில் உள்ளது. இருப்பினும், டெண்டரை ரத்து செய்வது குறித்து தங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, “கிழக்கு கடற்கரை சாலை டெண்டர் ரத்து செய்யப்படவில்லை. திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை, ஆனால் ஒப்பந்ததாரர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். எந்தவொரு முடிவும் அரசின் கையில்தான் உள்ளது. அதிகாரப்பூர்வ ரத்து உத்தரவுகள் கிடைத்த பின்னரே எங்களால் கருத்து தெரிவிக்க முடியும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





