இ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் – பங்கேற்காத கே.பி.அன்பழகன்
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடம் தேர்தல் தோல்வி தொடர்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், பாலக்கோடு எம்.எல்.ஏ கே.பி. அன்பழகன் பங்கேற்காதது பேசுப்பொருளாகி உள்ளது.
இதில் அரூர் எம்.எல்.ஏ சம்பத்குமார், பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ மரகதம் வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு முன்பு த.வெ.க அரசிற்கு கே.பி.அன்பழகன் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.





