இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்: டெல்லி முதல்வர்
செங்கோட்டை கார் வெடிப்புச் சம்பவம் குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கருத்துத் தெரிவிக்கும்போது, “இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த விவகாரத்தை விசாரிக்க அனைத்து சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்திக்க மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளோம். மக்கள் முறையான மருத்துவ சிகிச்சை பெறுவதை உறுதிசெய்ய, அரசாங்கம் முழு ஆதரவையும் அளித்து, நிலைமையைக் கூர்ந்து கண்காணித்து வருகிறது,” என்று கூறினார்.






