பீச்சில் காதலர்களை தாக்கி பண பறிப்பில் ஈடுபட்ட திருடர்கள்..!
சென்னையில் இரவு நேரத்தில் காதலியுடன் காதலர் பீச்சில் இருந்த ஐடி ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி பணப்பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பனையூர் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன், விஜய் என்ற இளைஞர்கள் மது போதையில் காதலர்களை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்ததால் பீர் பாட்டிலால் அடித்து விட்டு ஜிபே மூலம் 4,000 ரூபாயை கண்ணியப்பன் பெற்றுக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் பண பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கியை வைத்து இருவரையும் கைது செய்தனர்.






