--- --:--:-- --

கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்தது தேனி..!

8

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி ஐந்து பேரும் குணம் அடைந்ததால் கொரொனா இல்லாத மாவட்டமாக தேனி மாறியுள்ளது. தேனி மாவட்டத்தில் 43 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் பலியானார்.

 

இதன் முதற்கட்டமாக கடந்த மாதம் 16ம் தேதி 18 பேர், 22ஆம் தேதி இரண்டு பேர், 24 ஆம் தேதி 13 பேர், 26 ஆம் தேதி இருவர் 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு பேர் என குணமடைந்து வீடு திரும்பினார். இறுதியாக 5 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களும் வெள்ளிக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் கொரொனா இல்லாத மாவட்டமாக தேனி உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon