மந்திரம் செய்து பெண்ணை ஏமாற்றிய இளைஞர்..பறிபோன நகை..!
கோவை இளங்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த தன்னை இளைஞர் ஒருவர் நகைகளை திருடி சென்றதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் மகனை இழந்து அந்த 47 வயது பெண்ணின் வீட்டிற்கு காவி வேட்டி அணிந்து வந்த இளைஞர் இறந்த மகனின் ஆவி வீட்டில் உலாவுவதாகவும் அதை எடுக்காவிட்டால் கணவரையும் விரைவில் கொன்று விடும் எனக் கூறியதாக கூறப்படுகிறது.
தனது முகத்தை உற்றுப் பார்க்கும்படி கூறிய நபரிடம் தன்னை அறியாமல் தங்க மோதிரங்களை கழற்றிக் கொடுத்துவிட்டு மயக்கம் அடைந்து விட்டதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.






