பூனைக்கண், பாம்பு நாக்கு விவகாரம்..தான் செய்தது தவறு என ஒப்பு கொண்ட இளைஞர்..!
நாக்கை இரண்டாக பிரித்து சிதைத்து மாடிஃபிகேஷன் செய்த இளைஞர் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்த பாடி மாடிஃபிகேஷன் செய்ததை தவறான புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். திருச்சியை சேர்ந்தவர் ஹரிஹரன்.
இவர் பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நாக்கை இரண்டாக சிதைத்தும் இன்ஸ்டால் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது நண்பர் ஒருவருக்கு தன்னைப் போலவே நாக்கை சிதைத்து பாடி மாடிஃபிகேஷன் செய்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் ஹரிஹரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டதற்கு ஹரிஹரன் பாடிஃபிகேஷன் செய்றது தவறு என தான் புரிந்து கொண்டதாகவும் இதுபோன்று செயல்களில் ஈடுபட மாட்டேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.





