அதிகாரிகள் ஆய்வின் போது மோதிக்கொண்ட நெசவாளர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் முன்னிலையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
புகழ்பெற்ற கைத்தறியை விசைத்தறியில் நெசவு செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில் சிவசக்தி என்ற பகுதியில் செயல்படும் நாகராஜ் என்ற விசைத்தறையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது அங்க வந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருதரப்பினரின் புகாரில் சிசிடிவி பதிவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





