ரவுடிகளைப் போல் பட்டாகத்தியால் கேக் வெட்டிய மாணவன்
சென்னை மதுரவாயலில் கல்லூரி மாணவன் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரவாயிலை சேர்ந்த யுவராஜ் என்பவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருவதாக கூறப்படுகிறது.
இவர் நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுடன் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக மதுரவாயில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





