படியில் தொங்கிய பள்ளி மாணவி.. கன்னத்தில் பளார் என அறைந்த ஓட்டுநர்..!
அரசு பேருந்தில் படியில் ஏறிய மாணவியை உள்ளே போகச் சொல்லி கன்னத்தில் அறைந்த நடத்துனர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவரின் மகள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவி பேருந்தின் படியில் நின்றுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி படியில் நின்று நெரிசலில் சிக்கித் தவித்துள்ளார். பயணிகள் ஏறும் முன்பே பேருந்து எடுக்கப்பட்டு எலக்ட்ரானிக் கதவு மூடப்பட்டது.
படியில் நின்றிருந்த மாணவியை ஓட்டுனர் மூன்று முறை அறைந்து கோபத்தை மாணவியின் மீது காட்டியுள்ளார். பெற்றோருடன் காவல் நிலையம் வந்த மாணவி அரசு பேருந்து நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





