விஜய்-க்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த முதியவர்
தவெக மாநாட்டுக்கு இடம்கொடுத்த முதியவர், விஜய்யிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மாநாட்டுக்கு நிலம் வழங்கியதால், விஜய் அவருக்கு ஒரு பசுவை இலவசமாக வழங்கியிருந்தார்.
ஆனால் அது எலும்பும் தோலுமாக இருப்பதாகவும், பசுவின் பால் கன்றுக்கே சரியாக உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். தனக்கு 1 லிட்டர் பால் கொடுக்கும் வகையில் புதிய பசுவை விஜய் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





