புதிதாக கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைத்துக் கொண்டிருந்த போதே இடிந்து விழுந்ததால் பரபரப்பு..!
புதிதாக கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைத்துக் கொண்டிருந்த போதே இடிந்து விழுந்த மேம்பாலம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் மழை காலத்தில் உள்ளூர் மக்கள் ஆற்றை கடந்து செல்வதற்காக பலகையால் ஆன புதிய தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. ரிப்பன் வெட்டி கொண்டிருக்கும் பொழுது அந்த தற்காலிக பாலம் சரிந்து விழ தொடங்கியது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் பாலத்தின் உறுதித்தன்மையை குறித்து கேள்வி எழுந்து விவாதம் ஆகியுள்ளது.





