சிறுமியை காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பகலா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பது போல் நடித்து பாலியல் வன்கொடுமை செய்த மகாராஜா என்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபாரமும் விதிக்கப்பட்டது.
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவரது பெரியப்பா பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அபராத தொகையை ஐந்தரை லட்சத்துடன் கூடுதலாக 2000 ரூபாய் சேர்த்து 8 லட்சம் ரூபாயை சிறுமிக்கு வழங்க மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





