பள்ளிக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஏரிக்கரையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு சென்ற மாணவியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன் பேரில் தேடுதலில் ஈடுபட்ட காவல்துறையினர் பள்ளி சீருடையில் மாணவியின் உடலை மீட்டனர். மாணவி ஏரிக்கரைக்கு வந்தது எப்படி? கொலையா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.





