மருத்துவமனைக்குள் புகுந்து சிறுவனை அடித்த கும்பல்..!
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மருத்துவமனைக்குள் புகுந்து 14 வயது சிறுவனை சுற்றி வளைத்து அடித்து கொன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிவன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் முன்விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டது.
இதில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனைகள் தப்பியோடிய நிலையில் அவனை துரத்தி சென்ற கும்பல் ஜன்னல் கண்ணாடிகளை உபகரணங்களையும் அடித்து நொறுக்கியது. மேலும் அந்த சிறுவனை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.






