--- --:--:-- --

பேருந்து மேற்கூரையின் மீது நின்று தோப்புக்கரணம் போட்ட ஓட்டுநர்

1

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பேருந்தை வேகமாக ஓட்டிய அரசு ஓட்டுனருக்கு தோப்புகரணம் போடும் படி தண்டனை வழங்கப்பட்டது. அரசு ஓட்டுனர்களின் செயலை கண்காணிக்க மத்திய பிரதேசத்தில் தனிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் இந்தூரில் ராம்நகர் பகுதியில் அரசு பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் வேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக புகார் வந்தநிலையில் அனைவரின் முன்னிலையில் பேருந்தின் மீது தோப்புகரணம் போடும் படி அரசு ஓட்டுனருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon