நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி ஹாசன் சஃபின்
நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரியாக குஜராத்தில் சேர்ந்த 22 வயதான ஹாசன் சபின் பொறுப்பேற்றுள்ளார். குஜராத் மாநிலம் பானஸ்கருதா மாவட்டத்திலுள்ள கனோதார் கிராமத்தை சேர்ந்த 22 வயதான சபீர் கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
570வது ரேங்க்கில் தேர்ச்சி பெற்ற பின் அதன் பின்னர் ஐபிஎஸ் பயிற்சியில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக முடித்துள்ளார். வரும் 23ம் தேதி ஜாம்நகர் மாவட்டத்தில் உதவி காவல் ஆணையரின் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை சபின் பெற்றுள்ளார்.





