வாகன ஓட்டிகளுக்கு பேராபத்து..ரயில்வே நிர்வாகம் எடுத்த முடிவு..!
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில்வே கேட்டில் இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்கான இடைவெளியை ரயில்வே நிர்வாகம் சிமெண்ட் கட்டைகள் கொண்டு அடைத்ததை கண்டித்து வாகன ஓட்டிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
டூவீலர்கள் ரயில் வரும் பொழுது தண்டவாளத்தை கடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக ரயில்வே துறையினர் எடுத்துக் கூறியதை தொடர்ந்து இரண்டு மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.






