விஷப்பாம்பை வீட்டில் விட்டு குழந்தை, மனைவியை கொன்ற கொடூரன்..!
ஒடிசாவில் பெட்ரூமில் விஷ பாம்பை விட்டு மனைவி குழந்தையை கொன்ற கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் – பத்ரா தம்பதி. 2 வயது பெண் குழந்தை உள்ள நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கணேஷ் பத்ரா பெட்ரூமில் விஷ பாம்பை விட்டு மனைவி குழந்தையை கொன்றுள்ளார். போலீசார் முதலில் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்த நிலையில், விசாரணையில் கொடூர கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதில் அவர் கைது செய்யப்பட்டார்.






