தாயிடம் தகாத வார்தையில் பேசியதாக தம்பியை கொலை செய்த அண்ணன்..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தாயை தகாத வார்த்தையில் பேசியதாக உடன்பிறந்த தம்பியை கொலை செய்தனர். தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த ஐந்து சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
தாயை தகாத வார்த்தையில் பேசியதால் சகோதரர்கள் கார்த்திக், அசோக் ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர். பாட்டிலை உடைத்தனர். தாக்குதலை தடுக்க வந்த தந்தையை தள்ளிவிட்டு பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்தும் தலையில் கல்லை போட்டு தாக்கியும் இருவரும் தப்பியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






