தமிழ்நாடு திவால் ஆகும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது: பியூஸ் கோயல்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நான் கேட்கும் கேள்வி இதுதான்: தமிழகத்தின் பணம் எங்கே போனது? தொழில்வளம், கடின உழைப்பாளிகளான விவசாயிகள், சிறு-குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME), மீனவர்கள் மற்றும் திறமையான இளைஞர்களைக் கொண்ட இந்த மாநிலம் ஏராளமான வளங்களை உருவாக்குகிறது. அப்படியிருக்க தமிழகத்தின் கருவூலம் ஏன் காலியாக உள்ளது.
தமிழக அரசு வாங்கியுள்ள கடன் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மாநில முதலமைச்சர் இதைப் பற்றி எவ்விதக் கவலையும் கொள்வதில்லை; மாறாகப் பொய்களைப் பேசி பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அவர் முயல்கிறார். இங்கிருந்த பணம் எங்கே போனது என்பதைப் பற்றி அவர் சொல்ல விரும்புவதில்லை.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட பின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்கேள்வி





