மாணவி மீது பைக்கில் வந்து மோதிய மாணவர்கள்.. கொந்தளித்த பெற்றோர்..!
வேலூர் மாவட்டத்தில் தலைமை ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் பைக்கில் சாகசம் செய்து மாணவி மீது மோதியுள்ளனர்.
இதில் மாணவி காயமடைந்த நிலையில் பைக்கை மாணவிகளின் பெற்றோர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் போலீசில் ஒப்படைத்த பைக்கில் மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனால் மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.





