ஷூவுக்குள் மறைந்து உறங்கிய பாம்பு..!
மதுரையில் ஷூவுக்குள் பதுங்கிய இரண்டடி நீளம் கொண்ட சாரை பாம்பு மதுரையை அடுத்த மாளிகை நகர் பகுதியில் சேர்ந்த ஒருவரால் வீட்டின் வெளியே கழற்றி வைக்கப்பட்டிருந்த சாரை பாம்பு உறங்கியுள்ளது.
மாலை வேளையில் வெளியே செல்வதற்காக ஷூவை மாற்ற முயன்ற பொழுது கழற்றி வைக்கப்பட்டு இருந்த ஸூவுக்குள் பாம்பு படுத்திருப்பதை கண்டு அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். பாம்பை வெளியேற்றும் முயற்சி செய்து அவரால் முடியவில்லை என்பதால் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வந்த பாம்பு பிடி வீரர் இரண்டடி நீள சாரை பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





