காய்ச்சல் என வந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரையால் அதிர்ச்சி..!
புதுச்சேரி அரசு ஆரம்ப மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் வழங்கப்படுவதாக நோயாளிகள் குற்றம் சாட்டினர். நித்தியா பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப மருத்துவமனைக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலியோடு வந்த இளைஞர் ஒருவருக்கு காலாவதியான மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதற்கு மருத்துவமனை தரப்பிலிருந்து அலட்சியமாக பதில் அளிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.






