--- --:--:-- --

சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர்.க்கு சிவசேனா ஆதரவு

4

மகாராஷ்டிராவில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கடுமையாக எதிர்த்த போதும் அவற்றை ஆதரிப்பதிலும், உறுதியாக அமல்படுத்துவதிலும் முதலமைச்சர் உத்தரவு தாக்கரே திட்டவட்டமாக இருக்கிறார்.

 

மகாராஷ்டிராவில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்துவதற்கு தடையில்லை என்றும் அது ஒரு வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றதுதான் என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 

இதைப்போன்று தேசிய மக்கள் தொகை பதிவால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதில் சிவசேனா உறுதியாக இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon