பச்சை நிறமாக மாறிய கடல் நீர்..!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் திடீரென பச்சை நிறத்திற்கு மாறி சிறிய மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. திடீர் மாற்றம் காரணமாக பாம்பன் முதல் வேதாளம் வரை கரையோரம் துர்நாற்றம் வீசுகிறது.
பச்சை நிற கடல் தண்ணீர் குறித்து விளக்கமளித்த மத்திய கடல்மீன் மீன்வள ஆராய்ச்சி வல்லுனர்கள், நாக்டிலூக்கா சைட்டிலன்ஸ் என்ற கடற்பாசி அதிக அளவில் உற்பத்தி ஆவதால் இந்த மாற்றம் என தெரிவித்தனர்.







