கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..!
திருவாரூர் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், தரங்கம்பாடி, திருக்கடையூர், பூம்புகாரில் கனமழை பெய்து வருகிறது.





