மரணப்படுக்கையிலும் எஸ்பிபி என்னை பார்க்க விரும்பினார் – இளையராஜா
திரைப்பட பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சென்னை இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது.
இசைஞானி இளையராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இசை அமைப்பாளர்கள் மற்றும் திரைத்துறையினர் பங்கேற்றனர். விழாவில் பேசிய இளையராஜா, எஸ் பி பாலசுப்ரமணியம் தனது தொடக்க கால நண்பரும் மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுதும் தன்னை பார்க்க விரும்பினார் எனவும் தெரிவித்துள்ளார்.






