தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்: மோடி
தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையால், 10 ஆண்டுகளில் இலங்கை சிறையிலிருந்து 3,700க்கும் மேற்பட்ட மீனவர்கள் விடுதலையாகி இருப்பதாகவும், கடந்த ஓராண்டில் 600க்கும் மேற்பட்டோர் விடுதலையாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சில மீனவர்களை மரண தண்டனையிலிருந்தும் விடுவிக்கச் செய்திருப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.






