பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!
பிறந்தநாள் அன்று கேக் உண்ட சிறுமிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியாலா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
வீட்டில் எளிய முறையில் கொண்டாடியவர் கேக் வெட்டியபின் அதை குடும்பத்தினருடன் சேர்ந்து உண்டுள்ளார். பின் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் திடீர் உடல்நல குறைவு ஏற்படவே அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சிறுமிக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தது. எனினும் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மாணவி தனது பிறந்த நாள் அன்று கேக் வெட்டிக் கொண்டாடியது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





