சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கிய நபர் மீட்பு..!
சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி குளித்துக் கொண்டிருந்த நபர் திடீரென அலைகளில் இழுத்து செல்லப்பட்டு உயிருக்கு போராடினார்.
அப்பொழுது அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு நீரில் மூழ்கிக் கொண்டிருந்தவரை மீட்டு உயிரை காப்பாற்றினர்.





