பள்ளி நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க கோரிக்கை..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி தினமும் பயணிக்கும் நிலை நீடிக்கிறது. வடலூர் பேட்டை வரை செல்ல அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பேருந்துகளை பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
இதனால் விபத்து ஏற்படும் என அச்சமடைந்துள்ள பெற்றோர் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முன் வரவேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளனர்.





