சிரியா தலைநகரை நெருங்கிய கிளர்ச்சியாளர்கள் படை..!
சிரியா தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் படை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 மாகாணங்களை நேற்று பிடித்த துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் படை, நாட்டின் மிகப்பெரிய மாகாணமான ஹோம்சுக்குள்ளும் நுழைந்து விட்டது.
இப்பகுதி தலைநகர் டமாஸ்கசில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் எந்நேரமும் டமாஸ்கசையும் அவர்கள் கைப்பற்றலாம் எனக் கூறப்படுவதால் சிரியாவில் பதற்றம் நிலவுகிறது.





