தமிழக கடற்கரையில் அரிய வகை கடல்வாழ் புழு..!
இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் (ZSI) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், டாக்டர் அஞ்சும் ரிஸ்வி மற்றும் ஆராய்ச்சியாளர் திருமதி ரித்திகா தத்தா ஆகியோர், தமிழகக் கடற்கரையில் ஒரு புதிய வகை கடல்வாழ் நிமட்டோடை (நூற்புழு) இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் (ZSI) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், டாக்டர் அஞ்சும் ரிஸ்வி மற்றும் ஆராய்ச்சியாளர்ரித்திகா தத்தா ஆகியோர், தமிழகக் கடற்கரையில் ஒரு புதிய வகை கடல்வாழ் நிமட்டோடை (நூற்புழு) இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இது அரிதான ‘ஃபெரோனஸ்’ (Pheronous) பேரினத்தில் உலகளவில் பதிவுசெய்யப்பட்ட மூன்றாவது இனமாகும். ‘ஃபெரோனஸ் ஜெயராஜ் பூரி’ (Pheronous jairajpurii) எனப் பெயரிடப்பட்ட இந்த நுண்ணிய புழு, தமிழகக் கடற்கரையில் நடந்த கள ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டது.கடல் உயிரியலாளர்களின் கூற்றுப்படி, சுதந்திரமாக வாழும் கடல்வாழ் நிமட்டோடுகள் கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுகின்றன, மேலும் கடலோர சுற்றுச்சூழல் மதிப்பீட்டிற்கான உயிரியல் குறிகாட்டிகளாகவும் செயல்படுகின்றன.
இதுவரை, ‘ஃபெரோனஸ்’ பேரினத்தில் இரண்டு ஆவணப்படுத்தப்பட்ட இனங்கள் மட்டுமே இருந்தன – ஒன்று 1966 இல் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது, மற்றொன்று 2015 இல் சீனாவில் கண்டறியப்பட்டது, இது பின்னர் 2023 இல் கொரிய நீரிலும் பதிவாகியுள்ளது. இந்த சமீபத்திய கண்டுபிடிப்பு ‘ஃபெரோனஸ்’ இனங்கள் குறைந்தது மூன்று கண்டங்களில் பரவியுள்ளன என்பதைக் காட்டுகிறது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த இனம், இந்தியாவில் நிமட்டோட் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்திய முன்னோடி இந்திய நிமட்டோலஜிஸ்ட் மறைந்த பேராசிரியர் எம்.எஸ். ஜெயராஜ் பூரிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தைச் (ZSI) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், டாக்டர் அஞ்சும் ரிஸ்வி மற்றும் ஆராய்ச்சியாளர் திருமதி ரித்திகா தத்தா ஆகியோர், தமிழகக் கடற்கரையில் ஒரு புதிய வகை கடல்வாழ் நிமட்டோடை (நூற்புழு) இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.






