--- --:--:-- --

குமரியில் ராஜீவ் காந்தி சிலை சேதம்..!

10

நாகர்கோவில் அருகே மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அலங்காநல்லூர் சந்திப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை நேற்று இரவு உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon