சரவண பவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்!
சென்னை சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால், தனது ஊழியரின் மகளான ஜீவஜோதி மீது ஆசைப்பட்டு ஜீவஜோதியின் கணவரை கொலைசெய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டை சமீபத்தில் உறுதி செய்தது நீதிமன்றம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, தனது உடல்நிலை சரியில்லை என கூறி சரணடைய ஒரு மாதம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கட்டு பின்னர் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து,அன்றே, சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார் ராஜகோபால்.

இதில், அவரது மகன் சரவணன், தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு கோரப்பட்ட மனு ஏற்கப்பட்டு அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கப்பட்டது.அதன் பேரில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.sar
📱 Share on WhatsApp 𝕏 Share on X




