ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்..!
மும்பையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணை காவலர் ஒருவர் கணநேரத்தில் காப்பாற்றிய சம்பவம் பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்காக மக்கள் காத்திருந்தனர்.
அப்போது ரயில் வரும் சமயத்தில் நடைமேடையில் இருந்த பெண் ஒருவர் தண்டவாளத்தை நோக்கி திடீரென குறித்துள்ளார். இதை கண்ட காவலர் ஒருவர் உடனடியாக கீழே குறித்து அந்த பெண்ணை தண்டவாளத்தில் இருந்த மறுபக்கம் இழுத்து காப்பாற்றியுள்ளார்.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






