ஆக.15-ல் போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில் ரத்து
வடகோவை ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக போத்தனூர் – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மெமு ரயில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் எர்ணாகுளம் – கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்திற்கு பதிலாக பகல் 12.50 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





