ரயில் பெட்டிகளை தள்ளிய பயணிகள்..!
உத்திரப்பிரதேசத்தில் மீரட் அருகே டவ்ராளா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் 2 பெட்டிகளும் திடீரென தீப்பிடித்தது.
இதனையடுத்து மற்ற பெட்டிகளில் தீ பரவுவதை தடுக்க அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்றுகூடி ரயில் பெட்டிகளை சற்று தூரம் தள்ளி நிறுத்தியுள்ளனர். இதனால் ரயில் என்ஜினில்பிடித்த தீ மற்ற பெட்டிகளுக்கு பரவுவது தடுக்கப்பட்டது.






