குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று..!
குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயிலிருந்து குஜராத் வந்த ஒரு நபருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆய்வகத்தில் நடைபெற்ற மரபணு சோதனை மூலம் பாதிப்பு உறுதியானது.
முதலில் கொரொனா உறுதியான நிலையில் பாதிப்பு தற்போது உறுதியாகியுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.






