--- --:--:-- --

வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்..!

5

ந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்றுள்ளது.

 

இது மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து 14ஆம் தேதி காலை வரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் புதிய புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon