பொன்முடி மீது சேறு வீச்சு.. பதுங்கி பாய்ந்த போலீஸ்
ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில் 2 மாதங்களுக்கு பின் இருவேல்பட்டு கிராம மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதுவும் ஒரு பெண்ணை, ஆண் போலீசார் இழுத்துச்சென்ற வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, பொன்முடி மீது சேற்றை வீசிய மக்களை தேடி கைது செய்வதா?. உடனடியாக கைது நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.






