MLA அமுல் கந்தசாமி மறைவு: செந்தில்பாலாஜி நேரில் ஆறுதல்
மறைந்த வால்பாறை MLA(அதிமுக) அமுல் கந்தசாமியின் வீட்டிற்கு நேரில் சென்ற செந்தில்பாலாஜி, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது பொள்ளாச்சி MP ஈஸ்வரசாமி, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நேற்று CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், இன்று செந்தில்பாலாஜி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.





