இளம் பெண்களைக் கிண்டல் செய்தவரை தட்டிக் கேட்டதால் கைகலப்பு..!
பெரம்பலூர் அருகே குடிபோதையில் இளம் பெண்களைக் கிண்டல் செய்த இளைஞர்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் உடன் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
நேற்று மாலை கவுள்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களை பைக்கில் பின்தொடர்ந்த 2 இளைஞர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. தன் தாயாருடன் அந்த வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுனர் இளைஞர்களை கண்டித்ததால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.







