மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி
மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கருத்தைக் கேட்காமல், இந்த அறிக்கை மீது மத்திய நீர்வள ஆணையம் முடிவெடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ”உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை தெளிவுபடுத்துகிறோம். மேகதாது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன” என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.





