அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்டுக்கு பதிலாக மாப் குச்சி..!
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொது வார்டில் உள்ள நோயாளிகளுக்கும் மாப் குச்சியில் குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு குளுக்கோஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
ஏற்றுவதற்கு தனி ஸ்டாண்ட் இல்லாததால் தரையை துடைக்க பயன்படுத்தும் மாப் குச்சி ஸ்டாண்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலவார்டுகளில் நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.





