நேபாளத்தில் நிலச்சரிவு.. நடுவழியில் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு..!
நேபாளத்தில் நிலச்சரிவால் சிக்கிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக நாட்டின் முக்கிய நெடுஞ்சாலை ஆன பிரத்வி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேர வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் நடுவழியிலேயே தவித்து வருகின்றனர்.
சாலைகள் மூடப்பட்டதால் பெரும்பாலானோர் நடைபயணமாகவே தங்களது ஊர் நோக்கி புறப்பட்டு உள்ளனர்.





