ஐ.நா தலைமையகத்தில் காந்தி சிலை திறப்பு..!
நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமை இடத்தில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியா இருவரும் திறந்து வைத்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா சபை தலைமையகத்தில் இந்தியா சார்பில் பரிசாக வழங்கப்பட்ட சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள பிரம்மாண்ட பட்டியல் சிலையை வடிவமைத்த ராம் என்ற பிரபல சிற்பி இந்த சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





