திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மகிழ்ச்சி..!
கர்நாடாகாவில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கர்நாடக மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.
இரண்டு மணி நேரமாக ஆலங்கட்டி மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஒருவாரமாக வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.





