காந்தியடிகளுக்கு தபால் தலை வெளியிட்ட பிரான்ஸ் அரசு
மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நாடுகளிலும் அவரை பெருமை படுத்தும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன. பிரான்ஸ் நாட்டில் அவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது பிரான்ஸ் அரசும் நாட்டிற்கான இந்திய தூதரகமும் இணைந்து இந்த தபால் தலையை வெளியிட்டு உள்ளன.
இதைப்போல உலகின் உயரமான கட்டிடமான துபாயில் உள்ள புகழ்பெற்ற கலிஃபா கோபுரம் காந்தியின் உருவப்படம் தோன்றும் வகையில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை இந்தியர்களும் துபாய் மக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




